பிரிக்கேடியர் லீமா;
உன் பெயரைக் கேட்டாலே
எதிரியவனின் ஈரல்குலை நடுநடுங்குமாம்
அன்று நீ
யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த
வீர வேகம் கண்டு
இந்தியும் நடுங்கிப் போய்
சொக்கி நின்றதாம், ஆங்கு
சந்திரிக்கா அம்மையார்
அழுத அழுகை அப்படியாம்
தேசமொன்றின் தலைவியாம், அவ…
பாகிஸ்தான் போனவ
தலைவிரி கோலமொடு வீழ்ந்து
அழுத அழுகை இருக்கே
அப்பாடா,
அதையெல்லாம் சொல்லிவிட
மாழாது மாழாது..!
அம்மையே, நீ
விம்மிவிம்மிக் கண்ணீர்விட்டபோது
பத்திரிகைகளின் மூஞ்சைவழி கசிந்த
ஈரம்கூட, இன்னும்
காயவில்லை காயவில்லை
இவை எல்லாம்
அண்ணன் லீமா உன்னால்தான்
லீமா அண்ணா
உன் உருவம்
சந்தணப் பேளையில் உறங்குகிறது
இப்பவரை,
உன் வீர சுவாசம்
ஈழவெளியெங்கினும் வீசுகிறது
உன் வீரத்தடங்கள்,
உன் விசித்திர வியூகங்கள் என்று
உன் பற்றிய எல்லாமும்
வல்லரசுகளின்
இராணுவக் கல்லூரிகளில்
பாடமாய் துலங்குகின்றன
இது போதும் எமக்கு
இது போல்
இன்னும் இன்னுமான
அவை போதும் அவை போதும்..!
ஆதலினாலே,
அதிகார முலாம் பூசிய கோழையே
எம்மை என யாவரையும்
நீ அழித்தால்கூட
அழியாது அழியாது அழியாது
உறுப்பாய் வாழும் தமிழும்
நெருப்பாய் வாழும் திமிரும்…
அண்ணா லீமா
ஆராதிக்கிறேன் உன்னையும்
இந்நாளிலும்..!
20090520
-சமரபாகு சீனா உதயகுமார்