இந்த இரவும் நீதானிருப்பாய்
இனிவரும் இரவும் நீதானிருப்பாய்
இருத்தல் என்பது
என்னருகில் உன் சரீரம் ஒட்டுவதில்லை
உன் முத்தங்களால் எனக்கு நானே ஓவியம் வரைவதுமில்லை
உன் நினைவுகளைச் சுமந்து
கால நதியில் நீந்தி காய அக்னியில் விரகம் தீர்ப்பது
உன் நினைவுகளை மென்று ஆய்ந்து
நானோர் கவிதை வடிப்பது
உனக்கொன்று தெரியுமா
நானெழுதும் கவிதைகளில்
கவிதையிருப்பதில்லை
நீ இருக்கிறாய்
எங்கோர் மூலையிலிருந்து
என்னை வீசியதாய் ஆகாயம் வரைகிறாய்
உன் நினைவு நட்சத்திரங்களாய்
நான் விழுந்து விழுந்து எழுவதை நீ என்ன தான் செய்வாய்
ஒன்றைத்தான் சொல்வேன்
அன்று நீ எனைக் கவனமெனச் சொல்லி கவனமிசை எழுச் செய்தது போல்
இன்று நானுக்குச் சொல்கிறேன்
கவனமாக இரு
ஏனெனில் என்னால் மாத்திரமே
உனைத் திருடி கவிதை வடிக்க முடியும்
பிறரால் அல்ல
உன்னால் மட்டுமே என்னை நினைவால்
வாழ வைக்க முடியும்
பிறரால்ல
யுகந்தோறும் உனை எழுதி
இன்னொரு றோமியோ யூலியட் பாடுவேன்
என் காதலின் வயதை எண்ணி
ஏகாந்த இரவின் கனவினனாய்.
த. செல்வா
இரவு 8.38
உருத்திரபுரம்