0
அதிகாலைத் தேனீர்
அன்றைக்கு மட்டும்
அதிக சுவையாகும்..
பயணப் பையின் கனதி
பலகாரப் பார்சல்களால்
நிறையும்..
வாசல் வரைக்கும்
வழியனுப்பி சிரிப்பாள்
அன்றைக்கு மட்டும்
நேரத்துக்கு எழும்பிய
தங்கை..
குடும்பத்தார் எல்லோருக்கும்
ஒற்றைப் புன்னகையை
உதிர்த்து வண்டி ஏறுகையில்
எங்கிருந்தோ பாய்ந்து வரும்
குட்டி நாய்…
இந்த நினைவுகள்தான்
யாரும் பார்க்காமல்
மீண்டும் ஒருகணம்
வீட்டை திரும்பி பார்க்க சொல்கின்றன
கண்களிடம்….