Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மானம் எல்லாம் இழந்து வாழ்வதும் ஒரு வாழ்வா? | பா.உதயன்

மானம் எல்லாம் இழந்து வாழ்வதும் ஒரு வாழ்வா? | பா.உதயன்

1 minutes read

மானம் எல்லாம் இழந்து
வாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா
மானம் எல்லாம் இழந்து வாழ்வதும்
ஒரு வாழ்வா தமிழா

மரணத்தில் நின்றும்
மானம் ஒன்றே பெரிதெனக்கொண்டு
வாழ்ந்தவன் தமிழனெல்லோ
மானம் எல்லாம் இழந்து
வாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா

உயிரைக் கொடுத்து சென்றான் ஒருவன்
அவன் உண்மைக்கு சாட்சி எல்லோ
நின்ற இடத்தில் நின்றான் ஒருவன்
அவன் நீதிக்கு சாட்சியல்லோ
மானம் எல்லாம் இழந்து
வாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா

எத்தனை துன்பம் ஏன் இவன் சுமந்தான்
என்பதை நினைத்திருப்பாய்
இத்தனை வேள்வி ஏன் இவன் செய்தான்
என்பதை அறியாயோ

அந்த தத்துவ வாழ்விலே
சத்திய தியாகம் செய்தவன் தியாகம்
எப்பவும் சாவதில்லை
மானம் எல்லாம் இழந்து
வாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா.

பா.உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More