பல்வலியை போக்க செய்ய வேண்டியவைகிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்க வேண்டும்.
கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பற்களின் மேல் பகுதியில் வைத்தால், பல் வலியை விரைவில் குறைக்க முடியும்.
ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தால், பல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், பல் வலி உடனடியாக குணமாகிவிடும்.
உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து, அதை பல் துலக்கினால், பல்வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து, அதை கொண்டு பல் தேய்த்தால், பற்களின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.
ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம், பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் புண்களை குணமாக்கலாம்.
கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால், பல்வலி விரைவில் மறையும்.
0