இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் பயனுள்ள பொழுதுபோக்கு என்ற போர்வையில் மலையேற்றம், அடர் காட்டில் பயணம் என சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். இத்தகையப் பயணங்களை மேற்கொண்டு திரும்பும்போது அவர்கள் லைம் நோய் எனப்படும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
இதனை தொடக்க நிலையில் கண்டறிய தற்போது புதிய வடிவிலான பரிசோதனை அறிமுகமாகி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பொரிரேலியா பர்க்தார்பெர்ரி என்ற பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்று தான் லைம் நோய். இத்தகைய நோய் தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய நோய் தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடக்க நிலையில் தோல் சிவந்துவிடும். சிலருக்கு அந்த பகுதியில் தோல் தடித்துவிடும். இத்தகைய நோய் தொற்று ஏற்பட்டவர்களில் பத்து சதவீதத்தினருக்கு சொரியாஸிஸ் எனப்படும் சொறி ஏற்படக்கூடும். இதனைத் தொடக்க நிலையில் கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம்.
இத்தகைய பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் கடுமையான சோர்வு கழுத்துவலி, காய்ச்சல், முக வாதம், தொடர் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். கோளாறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். இவற்றின் பாதிப்பை உறுதி செய்ய தற்போது புதிய வகையினதான பரிசோதனை முறை அறிமுகமாகியிருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக இத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்த ரத்த பரிசோதனையை மேற் கொள்வார்கள். தற்போது காகிதத்தாலான செயற்கை பட்டையொன்றின் மூலம் இதன் பாதிப்பை தொடக்க நிலையிலேயே அறிந்துகொள்ளலாம். அதன் பிறகு சிகிச்சை எடுத்து இதிலிருந்து முழுமையாக குணமடையலாம்.
டொக்டர் பாக்யராஜ்.
தொகுப்பு அனுஷா.