தேவையான பொருட்கள் :
கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
ஒன்றிரண்டாக உடைத்த மிளகு – அரை டீஸ்பூன்
ஒன்றிரண்டாக உடைத்த துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உடைத்த உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்கு கழுவி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்து ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயைச் சேர்க்கவும்.
இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் ஒன்றிரண்டாக உடைத்த துவரம்பருப்பு, அவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
கலவை நன்கு வெந்ததும் கீழே இறக்கி பிடிகொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.
அவ்வளவு தான் கேழ்வரகு அவல் கொழுக்கட்டை ரெடி.
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.