Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கண்களின் ஆரோக்கியத்தை காக்கும் ஜூஸ்கள்!

கண்களின் ஆரோக்கியத்தை காக்கும் ஜூஸ்கள்!

1 minutes read

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புகிறவர்கள் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து ஜூஸ் தயாரித்து பருகலாம். இவை ஆங்கில தொடக்க எழுத்துக்களின் பெயரில், ஏ.பி.சி ஜூஸ் என்று அழைக்கப்படுகின்றது. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆகியவை கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. பீட்ரூட்டில் இருக்கும் லூட்டின், ஜியாசாந்தைன் போன்றவை விழித்திரையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

தக்காளி பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் ஆற்றல் கொண்டவை. முக்கியமாக லூட்டின், ஜியாசாந்தைன், சாந்ஹோபில் கரோடினாய்டுகள் பல வகையான கண் நோய்களை தடுக்க உதவுகின்றன.

அழகு சாதன பொருட்களில் அதிக அளவில் சேர்க்கப்படும் கற்றாழை ஜெல்லும் கண் குறைபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது. கற்றாழை ஜூஸ் பருகிவந்தால் கண்பார்வை திறன் மேம்படும். கண்புரை பிரச்சினை வராமல் தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

புளுபெர்ரி ஜூஸ் பருகி வந்தால் கண்புரை பிரச்சினையில் இருந்து தற்காத்து கொள்ளலாம். புற்றுநோய், இதயநோய் பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம். கண் பார்வை திறனையும் மேம்படுத்தலாம்.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வை குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் தவறாமல் ஆரஞ்சுப்பழம் அல்லது ஜூஸ் பருகிவந்தால் பார்வை இழப்பு நேராமல் பார்த்துக்கொள்ளலாம்.

மஞ்சள் நிற வாழைப்பழங்கள் சாப்பிடுவதும் பார்வையை தெளிவாக்கும். ப்ராக்கோலி ஜூஸ் பருகுவதும் கண்களுக்கு நல்லது.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More