அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் மாபெரும் நடன நிகழ்வு நடைபெற்றது.
2 ம் இணைப்பு
தமிழ்நாட்டின் கலைஞர் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற மானாட மயிலாட நடனப்போட்டியின் இறுதி நிகழ்வு லண்டனில் வெம்ப்ளி அறீனாவில் ஆரம்பமாகியுள்ளது.
1 ம் இணைப்பு
இன்று பிற்பகல் 4 மணிமுதல் ரசிகர்கள் அரங்கம் நோக்கி வர ஆரம்பித்துள்ளார்கள்.
பிரித்தானியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான LYCA MOBILE இன் ஏற்பாட்டில் கலைஞர் மற்றும் ஐங்கரன் தொலைக்காட்சி நிறுவனங்களும் இணைந்து இந்த மாபெரும் நிகழ்வினை லண்டன் நகரில் நடாத்துகின்றன.
இவ் நடன நிகழ்வில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் தலைமையில் தென்னிந்திய கலைஞர்கள் பங்குபற்றுகின்றார்கள்.
– Wembley Arena விலிருந்து துஷ் –