இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருக்கு இன்று லண்டன் நேரப்படி மாலை 04. 24 க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அரச குழந்தை பிறந்ததை உத்தியோக பூர்வமாக பக்கின்ஹம் அரண்மனை அறிவித்துள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் இளவரசி கேட் அவர்கள் கென்சிங்க்டன் மாளிகையில் இருந்து சென்ட் மேரீஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பக்கின்ஹம் அரண்மனையைச் சுற்றியும் வைத்தியசாலையைச் சுற்றியும் பெருமளவான மக்கள் ஆவலுடன் கூடி நின்றார்கள். பிரித்தானியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடந்த சில வாரங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கடந்த மூன்று வாரங்களாக உலகின் அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களும் சென்ட் மேரீஸ் வைத்தியசாலையைச் சுற்றி நேரடி அஞ்சலை செய்த வண்ணம் இருகின்றார்கள். லண்டனில் உள்ள ஹோட்டல்கள் சிறப்பாக அலங்கரித்து தமது வாடிக்கையாளர்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கிறார்கள்.
(இளவரசர் வில்லியம் ஜூன் 21, 1982 ல் பிறந்தபோது)
(இளவரசர் சார்லஸ் 1948 ல் பிறந்தபோது )