ஆப்பரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து குடியமர அகதிகளாக புறப்பட்டு செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் லிபியா மற்றும் சிரியாவில் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுமதியின்றி படகுகளில் சட்டவிரோதமாக செல்கின்றனர்.
அவ்வாறு சென்ற ஒரு படகு லிபியா தலைநகர் திரிபோலி அருகேயுள்ள தஜீரா வந்த போது கடலில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் லிபியா கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
இந்த படகில் மொத்தம் 250 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 26 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. மற்றவர்களில் தண்ணீரில் மூழ்கினர்.
ஏராளமான பிணங்கள் கடலில் மிதக்கின்றன. எனவே இந்த விபத்தில் 200–க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த மாதம் இதே போன்று ஒரு படகு கவிழ்ந்தது. அதில் 100 பேர் உயிரிழந்தனர்.