தன்னைத் தானே படம் பிடித்துக் கொள்ளும் “செல்ஃபீ’ முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் புகைப்படம், பிரிட்டனில் 70,000 பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டுள்ளது.
தற்காலத்தில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதைப் போலவே, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆஸ்கர் ஜெலாண்டர் 1850-களில் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். “ஆன்லைன்’ முறையில் நடைபெற்ற ஏலத்தில், இந்தப் புகைப்படத்தை வாங்குவதற்கு உலகம் முழுவதும் பலத்த போட்டி நிலவியதாக, ஏலத்தை நடத்திய “யார்க்பிரஸ்’ இணையதளம் தெரிவித்துள்ளது.