April 1, 2023 6:46 pm

கடும்பனி 150 கார்கள் தொடர் விபத்து-நெதர்லாந்தில் கடும்பனி 150 கார்கள் தொடர் விபத்து-நெதர்லாந்தில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நெதர்லாந்து நாட்டில் கடும் மூடுபனி காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 150 கார்கள் தொடர் மோதலில் சிக்கின. இந்த மோதலில் இருவர் பலியானார்கள். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆம்ஸ்டர்டாமில் இருந்து தென்மேற்காக உள்ள கோயஸ் மற்றும் மிடில்பர்க் நகரங்களுக்கிடையே உள்ள ஏ.58 நெடுஞ்சாலையில் இவ்விபத்து நடந்துள்ளது. இதில் இருவர் பலியானதாக ஜீலேண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளரான எஸ்தர் பூட் தெரிவித்தார். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறினார். கடும் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக அம்மாகாண பாதுகாப்பு செய்தித்தொடர்பாளரான ஹேன்ஸ் ஹப்ரெக்ட்செ கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்