ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகம் நடைமுறைப்படுத்தக்கோரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளுக்கு நேற்று அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கானோர் திடீரென திரண்டு வந்தனர்.
தங்கள் முகத்தை மூடியிருந்த அவர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் சாலைகளில் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை வலுக்கட்டாயமாக அகற்றினர். ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கு எதிராக, எதிர் போராட்டம் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.