துடிப்பை நிறுத்தி, 20 நிமிடங்களான இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம், வேறு ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தி, ஆஸ்திரேலிய டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். தற்போது, பல்வேறு நாடுகளிலும் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது. மூளைச் சாவு அடைந்தவர்களின் இதயம் அகற்றப்பட்டு, அவற்றின் துடிப்பு நிற்பதற்கு முன், குறிப்பிட்ட நேரத்துக்குள் வேறு ஒருவருக்கு
பொருத்தப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வின்சென்ட் மருத்துவமனை டாக்டர்களும், விக்டர் சாங் இதய ஆராய்ச்சி மருத்துவ மைய டாக்டர்களும் இணைந்து, இதய மாற்று அறுவை சிகிச்சையில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து, அந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த பீட்டர் மெக்டனால்டு கூறியதாவது:
இறந்த ஒருவரின் இதயம், சமீபத்தில், இதய நோய் உள்ள ஒருவருக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த இதயத்தை அகற்றும் போது, அதன் துடிப்பு நின்று போய் இருந்தது. அந்த இதயத்தை, ‘ஹார்ட் இன் ஏ பாக்ஸ்’ என்ற சிறிய பெட்டி போன்ற கருவியில் குறிப்பிட்ட ஒரு திரவத்தில்இ கதகதப்பான நிலையில் வைக்கப்பட்டது. அடுத்த, 20 நிமிடங்களுக்குள்இ அந்த இதயம், மாற்று அறுவை சிகிச்சை மூலம், மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு, மீண்டும் இயங்கச் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில், இதுவரை மூன்று இதய மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.