0
தமிழக மீனவர்களின் 38 படகுகளை பாதுகாப்பு கருதி மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்ல மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னாரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 38 படகுகளில் 15 படகுகளின் நிலை மிக மோசமாக இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், படகுகள் மேலும் சேதமடைய வாய்ப்பிருப்பதால், படகுகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்லவும் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.