இலங்கைக்கு வருமாறு ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர் சையது அல்-ஹுசைனுக்கு அந்நாட்டு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை மீது, ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் விவாதம் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.