Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போர் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடுவதை தாமதிக்க வேண்டும்’ – வெளியுறவு மந்திரி மங்கள சமரவீர போர் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடுவதை தாமதிக்க வேண்டும்’ – வெளியுறவு மந்திரி மங்கள சமரவீர

போர் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடுவதை தாமதிக்க வேண்டும்’ – வெளியுறவு மந்திரி மங்கள சமரவீர போர் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடுவதை தாமதிக்க வேண்டும்’ – வெளியுறவு மந்திரி மங்கள சமரவீர

0 minutes read

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த போர்க்குற்றம் சம்பந்தமாக ஐ.நா. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய அதிபராக சிறிசேனா தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்தநிலையில் அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீர நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் அவர், ‘இலங்கையில் நடந்த போர்குற்றத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கள் நாட்டிலேயே விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணை 2 மாதங்களுக்குள் முடிந்து விடும். எனவே அதுவரை போர் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடுவதை தாமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More