போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவித்த ஜாக்கி சானின் மகன் ஜெய்ஸீ சான் (32) வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெய்ஸீ சான் 100 கிராம் போதைப் பொருளுடன், தைவான் நாட்டு நடிகர் கோ காயுடன் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் பதுக்கியது மற்றும் போதைப் பொருளை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, ஜெய்ஸீ சானுக்கு (32) பெய்ஜிங் நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்தது.
மேலும், 2009ஆம் ஆண்டு முதல் சீனாவின் போதைப் பொருள் தடுப்புக்கான தூதராக ஜாக்கி சான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.