மகாபாரத இதிகாசத்தை சுட்டுரை (டுவிட்டர்) வடிவில் பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான சிந்து ஸ்ரீதரன் கடந்த 4 ஆண்டுகளாக வெளியிட்டு நிறைவு செய்துள்ளார்.
“எபிக் ரீடோல்டு’ எனும் பெயரில் 2,700 சுட்டுரைப் பதிவுகள் மூலம் இதனை அவர் சாதித்துள்ளார். முன்னாள் பத்திரிகைச் செய்தியாளரான இவர், பிரிட்டனின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில் இதழியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சுட்டுரை மகாபாரதப் பதிவுகளைத் தொகுத்துப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.
அடுத்தபடியாக, துரியோதன் கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் மகாபாரதத்தைச் சுட்டுரை வடிவில் சொல்லத் திட்டமிட்டுள்ளார்!