Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 6 மாதங்கள் தாமதமாகும் இலங்கை போர்க் குற்ற அறிக்கை | ஐ.நா. மனித உரிமை கவுன்சில்

6 மாதங்கள் தாமதமாகும் இலங்கை போர்க் குற்ற அறிக்கை | ஐ.நா. மனித உரிமை கவுன்சில்

0 minutes read

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவிருந்த இலங்கை போர்க் குற்ற அறிக்கை, ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உயரதிகாரி ஜெயிடு ராத் அல் ஹுசைன் திங்கள்கிழமை கூறியதாவது:

வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 28வது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. இது ஆறு மாதம் ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற அரசு இதுகுறித்து மேலும் விரிவான உள்நாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தது. இதன் மூலம் புதிய தகவல்கள் வெளிவரக்கூடும் என்ற அடிப்படையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்படுவதாக ஜெயிடு ராத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More