Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சந்தேகத்தின் பேரில் லண்டன் விமான நிலையத்தில் ஒருவர் போலீசாரால் கைதுசந்தேகத்தின் பேரில் லண்டன் விமான நிலையத்தில் ஒருவர் போலீசாரால் கைது

சந்தேகத்தின் பேரில் லண்டன் விமான நிலையத்தில் ஒருவர் போலீசாரால் கைதுசந்தேகத்தின் பேரில் லண்டன் விமான நிலையத்தில் ஒருவர் போலீசாரால் கைது

1 minutes read

லண்டனில் உள்ள ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திற்கு தனது ஒரு வயது மகனுடன் வந்த பெண்ணை தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தேகப்பட்டு போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

25 வயதாகும் தரினா ஷக்கில், தனது தந்தை முகமது(47), தாய் மேண்டி(48) மற்றும் உடன் பிறந்தவர்களுடன் இங்கிலாந்தில் உள்ள ஸ்டேஃபோர்ட்ஷயர் கவுண்டியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது கைக்குழந்தை சஹீமுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா செல்வதாகக் கூறி சென்றார். ஆனால், துருக்கி சென்ற அவர் சிரியாவின் எல்லையைக் கடந்து வடக்கு சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள ரக்காவுக்குச் சென்றுள்ளார்.

இதனால், தீவிரவாதிகளுடன் தொடர்பிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் லண்டன் விமான நிலையத்திற்கு வந்த ஷக்கிலை போலீசார் கைது செய்தனர். அதே சமயம் குழந்தையின் நலனில் அக்கறை செலுத்தப்படும் என்றும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More