Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பல் மருத்துவர் மீது வழக்கு பதிவு அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பல் மருத்துவர் மீது வழக்கு பதிவு

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பல் மருத்துவர் மீது வழக்கு பதிவு அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பல் மருத்துவர் மீது வழக்கு பதிவு

1 minutes read

அமெரிக்காவில், ஒரே சமயத்தில், மூதாட்டியின் 20 பற்களை பிடுங்க முயன்று, மரணம் விளைவித்த, இந்திய வம்சாவளி பல் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கனெக்டிகட் மாகாணம், சப்பீல்டு நகரில் வசிப்பவர் ராஷ்மி படேல், 45. இவர், ஸ்பிரிங்பீல்டு, பேஸ்டேட் மருத்துவமனையில், ஜூடித் கேன், 65, என்ற மூதாட்டியின், 20 பற்களை ஒரே

சமயத்தில் பிடுங்க முயற்சித்தார்.இதில், அந்த மூதாட்டி இறந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, என்பீல்டு போலீசார் விசாரித்து வந்தனர். இதில், பல் பிடுங்கும்போது, மூதாட்டிக்கு பிராணவாயு பற்றாக்குறையால், மூச்சுத் திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு, மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ராஷ்மி படேல் போலீசில் சரணடைந்து, பின்னர், ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில், படேலுக்கு, பல் மருத்துவ ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.அதேசமயம், படேல் மீண்டும் பல் மருத்துவராக பணியாற்ற முடியாதபடி அவரது, உரிமத்தை கோர்ட் முடக்கி

வைத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More