இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் கிறிஷந்தா டி சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் அதிபராக சிறிசேனா பதவியேற்ற நாளில் இருந்து நாட்டின் உயர்பதவிகளை வகிப்பவர்களை அதிரடியாக மாற்றியுள்ளார். இந்நிலையில், இலங்கை ராணுவத்திலும் அதிரடி மாற்றங்களை உருவாக்க எண்ணிய அவர் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களை படிப்படியாக ஓரம்கட்டி வருகிறார். தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் லெப்டினண்ட் ஜெனரல் தயா ரத்னாயகே நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், மேஜர் ஜெனரல் கிறிஷந்தா டி சில்வாவை தளபதியாக நியமித்து சிறிசேனா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் 21-வது தளபதியாக கிறிஷந்தா டி சில்வா நாளை மறுநாள் (22-ம் தேதி) பதவி ஏற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.