உலகின் இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் ஒவ்வொன்றும், ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். அந்த வகையில் கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் தனியார் ஒருவரின் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று இரண்டு தலைகளுடனான மாட்டு கன்றினை ஈன்றுள்ளது. சிதம்பரபிள்ளை வீரகத்தி என்பவரால் வளர்க்கப்பட்டு வந்த அந்த பசுவே இவ்வாறு இரண்டு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது.
அந்த கன்று ஆரோக்கியமாக காணப்படுவதுடன், கன்றினை ஈன்ற பசுவும் ஆரோக்கியமாக காணப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மக்கள், அந்த பசுவினையும், கன்றினையும் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து செல்கிறார்கள். விசேஷம் இது வித்தியாசம்.