சிரியாவில் தங்கள் மீது குண்டு வீச்சு நிகழ்த்தி வரும் ரஷியா மீது தாக்குதல் நடத்தி வீழ்த்தப்போவதாக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு சூளுரைத்துள்ளது.
இதுகுறித்து ஐ.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு முகமது அல்-அட்னானி கூறியதாவது:
எங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி வரும் ரஷியாவைத் தோற்கடிப்போம்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள், ரஷியாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் மதப் போரில் ஈடுபட வேண்டும்.
சிரியாவில் ரஷியப் படைகள் மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்கள் கடும் பின் விளைவுகளை ஏற்படுத்துபவை.
அந்தத் தாக்குதலில் சிரியா மக்கள் கொல்லப்பட்டால் நாமும் ரஷிய மக்களைக் கொல்ல வேண்டும்.
ரஷியர்கள் ஐ.எஸ். படையினரைக் கொன்றால் நாமும் ரஷியப் படையினரைக் கொல்ல வேண்டும்.
சிரியா போரில் ரஷியர்கள் தலையிடுவதால் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படிப்பினை, ஆப்கானிஸ்தானில் அவர்கள் பெற்ற கசப்பான அனுபவங்களை மறக்கடிக்கச் செய்துவிடும் என்றார் அவர்.
0