பன்னிரண்டு மாற்றுத் திறனாளிப் பெண்கள் எழுதிய தொகுப்பான வானம்பாடி இரண்டாவது தொகுப்பு நேற்று முந்தினம் மன்னாரில் வெளியிடப்பட்டது. ஈழத்தில், மாற்றுத் திறனாளிப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக வாழ்வியல் போராட்டங்கள் குறித்த பதிவாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
போர்க்கால வாழ்வியல் பதிவுகள் அடங்கிய இந்த நூலை குருவி வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே வானம்பாடி பகுதி ஒன்று கடந்த ஆண்டு வெளிவந்திருந்தது. வாசகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வரவேற்பினை பெற்றுள்ள வானம்பாடி தொடர்ந்தும் தொகுதிகளாக வெளிவரும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வில் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.