Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர்

வன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர்

2 minutes read

குருதிஸ்தான் உணவக உரிமையாளர், தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழ்மொழியையும் போற்றிப் புகழுகிறார்…. நேற்று ஒரு மாறுதலுக்காக நானும் மகன் தமிழ்கோவும் குருதிஸ்தான் உணவகத்துக்கு சாப்பிடப் போயிருந்தோம்.

குளிர் அதிகாமாக இருந்தது. நாங்கள் சற்று நடுக்கத்துடன் இருந்தோம். ‘தலைவர் பிரபாகரன்’ பெயரை உச்சரியுங்கள் குளிர் கூதல் எல்லாம் வெருண்டு ஓடிவிடும் என்றார்…..

Image may contain: night and outdoor

தொடர்ந்து பேசுகையில் அவர் ஒரு குருதிஸ்தான் குடிமகன். பெயர் நீயூஸ்ராட் இனமானம் மிக்கவர். விடுதலைப் புலிகள் வன்னியில் வைத்து பலநூறு குருதிஸ்தான் போராளிகளுக்கு பயிற்சி வழங்கியதாகவும் அப்படிப் பயிற்சிபெற்ற போராளிகளை ‘வன்னியில் பயிற்சிபெற்றவர்’ என பெருமிதமாக தங்கள் சமூகம் அழைப்பதாகவும் சொன்னார். அவர்களில் பலர் தற்போது தளபதிகளாக இருப்பதாகவும் ‘பால்ராஜ் வியூகம்’ என்ற பாடம் கூட தங்கள் போராளிகளுக்கு கற்பிக்கப்படுபதாகவும் சொன்னார்.

Image may contain: table, food and indoor

தமிழ்மொழி மொழிகளின் தாய்…… தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் தலைவர் அல்ல ஒடுக்கபடும் அனைவருக்குமானவர். மாவீரர் நினைவு நிகழ்வுகளுக்கு குருதிஸ் மக்களையும் அழைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பிரபாகரன் குர்திஸ்க்கான பட முடிவுகள்"

மேற்படி உணவகம் 803 மார்கம் வீதி ஸ்காபுறோவில் அமைந்திருக்கிறது. அருமையான சாப்பாடு. ஒரு மாறுதலை விரும்புபவர்கள் மேற்படி உணவகத்துக்கு செல்லாம்.

எழுதியவர் – திரு பகவத் சிங்கம் Thiru B Singam

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More