இலங்கை சுதந்திர தினத்தில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் இசைக்கும் முடிவு அரச அதிகார வர்க்கத்தின் மிதவாத சிந்தனையின் வெளிப்பாடு எனக் கண்டித்துள்ள சமூக செயற்பாட்டாளர்கள், இன்று கொழும்பில் ஒன்றுகூடி தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் இசைத்தனர்.
அரசின் இந்த முடிவு மனித உரிமை மீறல் என்பதுடன் அரசியலமைப்பு மீறலும் ஆகும் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இன, மத பேதமின்றி ஒன்று கூடிய சமூக செயற்பாட்டாளர்கள் அரசின் முடிவுக்கு எதிராக தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் இசைப்பதற்கான செயற்பாடுகளில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.