அன்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்ததால் சமூக பொறுப்புடன் இரத்த பரிசோதனையின் தொடர்ச்சியாக கொரோனா நோய் தொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது..
பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்து எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் வீடுதிரும்பிவிட்டார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போலிச் செய்திகளை பரப்பி வீண் பயப்பீதியை சமூகத்தில் உருவாக்க வேண்டாம் என முன்னாள் பாராளுமன் உறுப்பினரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.