ஸ்ரீலங்காவில் 552 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அரசாங்கம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலகம் முழுவதும் கொரோனா தொற்றானது வேகமாக பரவிவருகிறது. இந்நிலையல் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது இன்று முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 552 ஆக இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.