Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழ். தாவடிக்கு எப்போது விடுதலை? வடக்கு சுகாதார பணிப்பாளர் தகவல்

யாழ். தாவடிக்கு எப்போது விடுதலை? வடக்கு சுகாதார பணிப்பாளர் தகவல்

1 minutes read

கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர் வசித்த தாவடிப் பகுதி முழுமையாகக் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினருடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதிவரும் 13 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More