Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை! 

ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை! 

1 minutes read

நாடு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாத இறுதிக்குள் ஊரங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொளள்ப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் வைரஸை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு, சமூக விலகலை உறுதி செய்து, ஒரு சாதாரண வாழ்க்கையை பராமரிப்பதில் பொதுமக்கள் அக்கறை கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More