கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த புஸ்பராணி நாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
56 வயதான இவர் மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக மருத்து சான்றிதழ்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவரும் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுயநினைவின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.