Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழில் கொரோனா பரவ நான் காரணம் இல்லை! சுவிஸ் போதகர்

யாழில் கொரோனா பரவ நான் காரணம் இல்லை! சுவிஸ் போதகர்

1 minutes read

யாழில் கொரோனா பரவ தான் காரணம் இல்லை என யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என கூறப்படும், சுவிஸ் போதகர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கும் அரியாலைப் பகுதிலே முதல் தொற்று உருவானது என சுகாதாரத் துறை மற்றும் அரச உயர் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்த சூழ்நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கை தேசத்திற்கு நானும் எனது சபையாரும் அநேக தரம் வந்து போகின்றோம்.

அதற்கு காரணம் என்னவென்றால் நானும் எனது சபையார் யாவரும் இலங்கை தேசத்தையும் இலங்கை மக்களையும் அதிகமாக நேசிக்கின்றோம்.

அதிகமாக உபவாசத்தோடு கூட சபை மக்களாய் சேர்ந்து இலங்கைக்காக இலங்கை மக்களுக்காக பிரார்த்தனைகளை முன்னெடுத்திருக்கிறோம்.

வியாதிகளை கண்டறியும் கருவிகள் ஊடாக நாம் சென்றோம். எங்களுக்கு ஒரு வியாதியும் அங்கே இருக்கவில்லை.

நாங்கள் வந்த காரியங்களை சீக்கிரமாக முடித்துக் கொண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கே எல்லா வழிப்பாட்டு தலங்களிலும் வழிபாடுகள் நடந்தன.

அதேபோல் எங்களுடைய சபையிலும் வழிபாடுகளை நாங்கள் நடத்தினோம். அங்கே எல்லாரும் வரவில்லை. அருகிலிருந்த குறிப்பிட்ட சிலரே வந்திருந்தனர்.

நாங்கள் எங்களுடைய ஆராதனையை எந்த செய்தி தாளிலும் விளம்பரம் செய்யவில்லை. சாதாரணமாய் ஆராதனை நடத்தினோம்.

சீக்கிரமாக ஆராதனையை முடித்து விட்டு சீக்கிரமாக அனைவரையும் அனுப்பி விட்டு நான் கொழும்புக்கு கிளம்பி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More