December 4, 2023 6:49 am

ஊரடங்குச் சட்டம் பற்றிய விசேட அறிவித்தல்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மே மாதம் 4ஆம் திகதி காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுலாகும். அதன் பின்னர் மே முதலாம் திகதி வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு மறுநாள் காலை 5 மணிவரை தினசரி அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறையினர் மே மாதம் 4ஆம் திகதிக்கு பின்னர் செயற்பட சட்டங்கள் தளர்த்தப்படவுள்ளன. தனியார் துறையினர் காலை 10 மணிக்கு வேலைகளை ஆரம்பிக்கக் கேட்கப்பட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்