நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
அத்துடன், 527 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.