Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொழும்பில் அதிகளவில் பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை

கொழும்பில் அதிகளவில் பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை

1 minutes read

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 150ஆக பதிவாகியுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 36 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 பேரும், கண்டி மாவட்டத்தில் 13 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 11 பேரும் கொரோனா நோயினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை சிப்பாய்கள் 393 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் ஆபத்துகள் அதிகம் உள்ள பிரதேச மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் கொரோனா தொற்றவில்லை என்பது மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம் என மத்திய கொழும்பு சுகாதார அதிகாரி தம்மிக்க அதிகாரிவத்தகே தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More