Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை!

கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை!

1 minutes read
உரிய பயிற்சி அளிக்க உதவுகிறேன்; என்ன உறுதி தருவாய்?'' | ''650  மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன்'' - ஆசிரியை சபரிமாலா உதவியால் நீட் தேர்வில்  ...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி – மகேஸ்வரி தம்பதியின் மூத்த மகன் ஜீவித்குமார், பெரியகுளம் அருகே உள்ள சில்வர்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துள்ளார்.

இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற அவர் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடமும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823 வது இடமும் பிடித்துள்ளார். 

ஜீவித்குமார் தனியார் பயிற்சி மையத்தில் பயின்றுள்ளார் என்பதும்,  இரண்டாவது முறையாக தேர்வெழுதி இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் நீட் தேர்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த மோகனபிரபா 705 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இருவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்துள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More