இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்திற்கு இலங்கை வீரர்கள் பலர் பரிந்துரைக்கப்பட்ட போதும் ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை.
இதன் மூலம், இலங்கை வீரர்களின் ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்கான போட்டித் தன்மை தொடர்பிலான செய்தியை இந்தியா வழங்கியிருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தெரிவு செய்வதற்கான சிறந்த களமாக ஐ.பி.எல். சுற்றுத்தொடரைக் குறிப்பிட முடியும் என்று குறிப்பிட்டுள்ள மஹேல ஜயவர்த்தன ஐ.பி.எல். போட்டிகளுக்காக எந்தவொரு இலங்கை வீரரும் தெரிவு செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இலங்கை வீரர்கள் இதன் மூலம் கவலையடைந்தாலும், அவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற செய்தி இதன் மூலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் மஹேல ஜயவர்த்தன மேலும் கூறினார்.