Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் வரையறுக்கப்பட்ட பார்வையாளர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரையறுக்கப்பட்ட பார்வையாளர்கள்

1 minutes read

2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு குறைந்த எண்ணிக்கையிலான உள்நாட்டு பார்வையாளர்களை அனுமதிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விளையாட்டுகளின் போது 10,000 பார்வையாளர்கள் அல்லது ஒரு இடத்தின் திறனில் 50 சதவீதம் வரை அனுமதிக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக  ஜப்பானின் கியோடோ செய்திச் சேவை செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு தகவல் வெளியிட்டுள்ளது.

அதேநேரம் பிரதமரின் யோஷிஹைட் சுகாவின் நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் உள்நாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையை 5,000 அல்லது 10,000 ஆக உயர்த்துவது போன்ற விருப்பங்கள் குறித்து மறுஆய்வு செய்து வருவதாக ஜப்பான் தொலைக்காட்சி வலையமைப்பான ஆசாஹி தெரிவித்துள்ளது.

ஜூலை 23 ஆரம்பமாகும் டோக்கியோ விளையாட்டுகளுக்கு ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பில் ஜப்பானிய பொருளாதார அமைச்சர் யசுதோஷி நிஷிமுரா மற்றும் அரசாங்கத்தின் உயர் மருத்துவ ஆலோசகர் ஷிகெரு ஓமி ஆகியோர் இன்று புதன்கிழமை ஒரு கூட்டு செய்தி மாநாட்டை நடத்துவார்கள் என்று அமைச்சரவை அலுவலகம் கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More