Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்

ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம்

1 minutes read

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம், மனு சாவ்னியை உடன் அமுலாகும் வகையில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே தலைமையில் வியாழக்கிழமை நடந்த அவசர கூட்டத்தில் வாரியம் இந்த முடிவை எடுத்தது.

இந்த முடிவு முறையான வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவில்லை, ஆனால் குழுவில் உள்ள எந்தவொரு பணிப்பாளரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் நம்பப்படுகிறது.

இதற்கிடையில், ஐ.சி.சி வாரியத்துடன் நெருக்கமாக பணியாற்றும் தலைமைக் குழுவின் ஆதரவுடன் செயல்படும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் கடமைகளை பெறுப்பேற்பார் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

சக ஊழியர்களுடனான “சிராய்ப்பு நடத்தை” குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சாவ்னி மார்ச் மாதம் “விடுப்பில்” அனுப்பப்பட்டார்.

இந் நிலையில் தன்னுடைய வழக்கை ஒரு சுயாதீன நெறிமுறைகள் தீர்ப்பாயத்தால் விசாரிக்கக் கோரி சாவ்னி புதன்கிழமை எழுதிய கடிதத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கடிதத்தில், அவர் ஐ.சி.சி மற்றும் அதன் தலைவர் பார்க்லே மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More