இந்தியாவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரிலிருந்து குசல் ஜனித் பெரேரா விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பயிற்சி நடவடிக்கைகளின்போது குசல் பெரேராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந் நிலைமை உருவாகியுள்ளது.
எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இலங்கை கிரிக்கெட் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.
ஆனால் மருத்துவர் குழு, குசல் பெரேரா தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளது.
குசல் பெரேரா அணியின் தலைவராக தற்சமயம் இல்லாவிட்டாலும், அணியின் விக்கெட் காப்பாளராகவும் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும் இலங்கை அணியில் உள்ளார்.
இந் நிலையில் இவர் தொடரிலிருந்து விலகினார் அது இலங்கைக்கு மேலும் பின்டைவினை ஏற்படுத்தும்.
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிறு அன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.