Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது!

டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது!

1 minutes read

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் உள்ளன.

இந்தியா இதுவரை 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது. இன்றைய நாளில் 2 பதக்கங்களை வெல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது.

மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா களம் இறங்குகிறார். கோல்ப் பெண்கள் பிரிவில் 2-வது இடத்தில் நீடிக்கும் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் கடைசி ரவுண்டில் விளையாடினார்.இந்திய வீராங்கனை அதிதி அசோக் 4ம் இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை தவற விட்டார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் திறமையாக விளையாடி அனைவரும் கவனத்தையும் ஈர்த்த நீரஜ் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்திய நேரப்படி மாலை 4.30 இந்த போட்டி நடைபெற உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More