Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்| இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்| இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்

1 minutes read

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள யோனி லியை (ஜெர்மனி) சந்தித்தார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-18 என்ற நேர்செட்டில் யோனி லியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 14-21, 21-19 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோ போபோவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More