செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் காணாமல்போன இங்கிலாந்து இளைஞன் மலேசியாவில் சடலமாக மீட்பு!

காணாமல்போன இங்கிலாந்து இளைஞன் மலேசியாவில் சடலமாக மீட்பு!

0 minutes read

தென்கிழக்காசியாவுக்கு தனியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த “ஜான்சன் டொய்லே” எனும் 25 வயதுடைய இங்கிலாந்து இளைஞன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மலேசியாவில் காணாமல் போயிருந்தார்.

அவர் இறுதியயாக கடந்த மே மாதம் 27ஆம் திகதியன்று ஒரு மதுபான விடுதியில் காணப்பட்டமை சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் பொலிஸாரும் இளைஞனின் பெற்றோரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் காணாமல்போன இங்கிலாந்து இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மின்தூக்கிச் சுரங்கத்தினுள் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தளத்தில் மின்தூக்கிச் சுரங்கத்தினுள் ஓர் இளைஞன் கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

உயரத்திலிருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More