ஜம்மு காஷ்மீரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இந்தியாவில் அதிகரித்துள்ளமையினால் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த 31ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைவடையாதமையினால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை நீடிக்க ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பகுதியில் நேற்றைய நிலவரப்படி 20,972 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 613 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.