முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சுயநினைவின்றி தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிரணாப் முகர்ஜிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) கடந்த 10ஆம் திகதி, டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதுடன் கொரோனா வைரஸ் தொற்றும் உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு, நுரையீரல் தொற்று தீவிரமடைந்துள்ளதாகவும் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் நேற்று மருத்துவமனை வெளியிட்ட செய்தியில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் மாற்றமில்லை. அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார் என கூறப்பட்டுள்ளது.