Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஒக்ஸ்போட் தடுப்பூசியை சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் உத்தரவு

ஒக்ஸ்போட் தடுப்பூசியை சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் உத்தரவு

1 minutes read

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசியை சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு தடுப்பூசி - சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் உத்தரவு
கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன.

அதன்படி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


முதல் கட்டமாக, சென்னையில் 300 பேரிடம் கோவிஷீல்டு செலுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் பரிசோதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More