தீவிரவாதம் என்பது புற்றுநோயை போன்றது. அது கொரோனா பெருந்தொற்றைப்போல அனைவரையும் பாதிக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்பொது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஒட்டுமொத்த மானுடத்தையும் தீவிரவாதம் பாதிக்கிறது. கொரோனா போன்ற குறிப்பிட்ட சூழ்நிலை ஏற்பட்டு மக்களை அது பாதிக்கும் போது மட்டுமே உலக அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தீவிரவாதத்தை நிரந்தரமாக ஒழிப்பது அவசியம்.
பாகிஸ்தான் போன்ற நாடுகள் தீவிரவாதிகளை உற்பத்தி செய்து அதனை ஏற்றுமதி செய்வதுடன் தங்களை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள முயற்சியும் செய்து வருகின்றன.
தீவிரவாதத்திற்கு நிதியுதவியும் ஊக்கமும் இந்த நாடுகள் வழங்குகின்றன. இதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சர்வதேச நாடுகள் தீவிரவாதத்தை ஆதரிக்கும் கட்டமைப்புகளை நிரந்தரமாக ஒழிப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.